மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி விழா நடைபெற்ற கர்கோனில் வகுப்புவாத வன்முறையில் கொல்லப்பட்ட இஸ்லாமியரின் உடல் 8 நாட்களுக்கு பின் கண்டறியப்பட்டுள்ளது. ராமநவமி கலவரத்தில் முதலில் உயிரிழந்தவரின் உடல் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலின் கர்கோனின் பகுதியில் ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஆனந்த் நகர் மசூதிக்கு இபரிஷ் என்பவர் தொழுகைக்காக சென்றார். அப்போது அருகில் உள்ள கபாஸ் மண்டி பகுதியில் நடந்த ராம நவமி கலவரத்தில் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது உடல் ஏப்ரல் 10-11 இடைப்பட்ட இரவில் கபாஸ் மண்டி-ஆனந்த் நகர் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில் குடும்பத்தினரின் புகாரின் பேரில், 4 நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 14 காலை, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், ஏப்ரல் 10-11 இரவு அடையாளம் தெரியாத நபரை 7-8 பேர் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் கூறிய பின்னரும், உடலை மீட்ட பிறகு கொலை வழக்கை பதிவு செய்ய காவல்துறை ஏன் மூன்று நாட்களுக்கு மேல் எடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே 5-6 நாட்களாக காணாமல் போன மகனைத் தேடிக்கொண்டிருந்த இபர்சியின் தாய் மும்தாஜ், ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர் சிறையில் இருக்கிறாரா அல்லது உயிரிழந்துவிட்டால் அவரது உடலை ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று காலை இபரிஷ் உடல் இந்தூரின் மை மருத்துவமனையின் பிணவறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம், "இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்ற உடனேயே, ஏப்ரல் 14 அன்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது, இது கூர்மையான ஆயுதத்தால் தலை மற்றும் கழுத்தில் அடித்து காயப்படுத்தியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்றார். அதேசமயம் கர்கோன் மருத்துவமனையில் டீப் ஃப்ரீசர் வசதி இல்லாததால், உடல் பின்னர் இந்தூரின் மை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது " என்றார்.
இந்தூரில் உள்ள மருத்துவமனையில் உடலை அடையாளம் காண, கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களை அழைக்க காவல்துறைக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக ஏன் ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.